Tuesday, July 2, 2013

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை!!!

நேற்றையதினம் கைது செய்யப்பட்ட யாழ மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டு ள்ளார்

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றையதினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
இவரது வழக்கை விசாரித்த யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் இவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஆவணி 27ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் பணித்துள்ளார்.

விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கூறி அத்துமீறி உள்நுழைந்து தமது விடுதியின் தங்கியிருந்த ஒரு ஜோடியினை பிடித்தார் என இவர்மீது விடுதி தரப்பினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com