Saturday, July 20, 2013

வெளவால் தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வெள்ளைமலையை அண்மித்த பகுதியினூடாக முல்லைத்தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடி வாகனம் ஒன்று வௌவால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த முல்லைத்தீவு, முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பாக்கியம் (வயது 70) என்ற முதியவர் உயிரிழந்ததுடன் அதே இடத்தைச் சேர்ந்த க.தளையராஜசிங்கம் (வயது 58), பரமேஸ்வரன் தினுசன் (வயது 25) ஆகியோருடன் மேசன் தொழிலாளி ஒருவரும் கூலித் தொழிலாளி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த ஐந்து பேரும் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சென்றுகொண்டிருந்த போது ஒட்டுசுட்டான் வெள்ளைமலை ஏற்றத்தை அண்மித்த பகுதியில் வெளவால்கள் வாகனத்திற்குள் உள்நுழைந்து தாக்கியதில் வாகனச் சாரதி நிலைதடுமாறி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனம் வீதியின் அருகாமையிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அவ் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் படுகாயமடைந்த ஐவரில் மூவரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திசாலைக்கும் ஏனைய இருவரை யாழ்.வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment