Saturday, July 6, 2013

ஒரு வார காலத்திற்குள் வடமாகாண சபை தேர்தல் திகதி அறிவிக்கப்படும்- மஹிந்த தேசப்பிரிய

வடமாகாண சபை தேர்தலுக்கான அங்கீகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கின்ற நிலையிலேயே தேர்தல் திகதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் நியாயபூர்வமாகவும், அதே நேரம் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெற வேண்டுமானால் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com