Saturday, July 27, 2013

தந்தையினால் தாக்கப்பட்ட ஒன்றரை வயது மகள் காலன் கையில்!!

தந்தையினால் தீயினால் சுடப்பட்ட வயது ஒன்றரை மட்டுமே ஆன சின்னஞ் சிறுமி காலஞ் சென்றுள்ளாள்.

பகவத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையொருவரினால் தனது மகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, சுடப்பட்டதனால் கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயதுச் சிறுமி இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்தையினால் சென்ற 17 ஆம் திகதி பிற்பகல் தனது மகள் துன்புறுத்தப்பட்டு கை கால்கள் சுட்டெரிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை பொகவத்தலாவ வைத்தியசாலைக்கு அநுமதிக்கப்பட்டதன் பின்னர், கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகையில் 10 நாட்களின் பின்னர் இறந்துள்ளது.

சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை சிறைவைக்கப்பட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com