Wednesday, July 10, 2013

கடத்தல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு இன்டர்போல் இலங்கைக்கு வருகை!

கென்யாவில் இருந்து இலங்கை ஊடாக துபாய்க்கு கொண்டு செல்லப்படவிருந்த தந்தங்கள் அடங்கிய கொள்கலன் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக் கப்பட்டிருந்த நிலையில், குறித்த தந்தங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இன்டர்போல் உத்தியோ கத்தர்கள் மூவர் இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் கைப்பற்றப்பட்ட தந்தங்களின் DNA மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், யானைத் தந்தங்கள் எந்த நாட்டிற்குக் கடத்தப் படுகின்றன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை குறித்த அதிகாரிகள் மூவரும் ஆரம்பித்துள்ளனர் எனவும், சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

No comments:

Post a Comment