Sunday, July 7, 2013

அமைச்சரவையிலுள்ள மடையர்களால் இந்தியா எங்களுக்கு எதிராக எழுந்துள்ளது! - ஹேமகுமார

புத்தகயாவின் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசாங்கமே!

திருமிகு அநகாரிக தர்மபால பாதுகாத்த புத்தகயாவை மீண்டுமொரு முறை நாங்கள் இழப்பதற்கு தற்போதை மடைமையில் மூழ்கும், மூர்க்கத்தனமுடைய, அரசு காரணமாக இருக்கின்றது என மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிடுகிறார். அமைச்சரவையில் இருக்கும் மடச்சாம்பிராணி அமைச்சர்களின் செயற் பாடுகளினால் எங்களுக்கு மிகஅருகில் உள்ள சகோதர நாடாகிய இந்தியா எங்களுக்கு எதிராக மாறக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான மிக மோசமான ஒரு நிலைக்கு எமது நாடு தள்ளப்படுவதற்கு, பௌத்தர்களின் தலையாய புத்தகயா இன்று பயங்கரவாதிகளால் அழிவுக்குள்ளாவதற்கு தற்போதைய அரசாங்கமே காரணமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா அன்றுதொட்டு இன்றுவரை எங்கள் நாடு துன்பியலில் சிக்குண்ட நேரங்களில் எல்லாம் எமக்கு உதவி உபகாரம் செய்தது. என்றாலும் இன்று, இந்தியா எங்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அமைப்பின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியாலளர் சந்திப்பிலேயே ஹேமகுமார நாணயக்கார மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

4 comments :

Anonymous ,  July 7, 2013 at 6:30 PM  

India is totally responsible for what´s happening in India and not the Srilankan Government,as a Buddhist country we are compelled
to make our grievances,even we can spend our money< to repair the Buddhist temple back in Buddhagaya.Every
democratic country has the obligation to protect the religions,
what it has.Attack on temples,churches mosques,or any other
religious institutions happens as a result of our limited brains

ஈய ஈழ தேசியம் ,  July 7, 2013 at 10:56 PM  

மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார இருக்க வேண்டிய இடம் தமிழர் கூட்டமைப்பு. மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கதைவிடுகிறார். இந்தியாவில் நடைபெற்றது பயங்கரவாதின் செயல்களில் ஒன்று இம்முறை புத்தகயாவில் நடை பெற்றுள்ளது.

Anonymous ,  July 8, 2013 at 7:55 AM  

We have a doubt whether that Mr. Hemakumara Nanayakkara just got from a long sleep and making rubbish staements about the Srilankan government.This is purely a considerable matter to India and not to Srilanka.

Anonymous ,  July 8, 2013 at 11:12 AM  

Sorry,Maubima peoples party has a
scare crow as its head.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com