Tuesday, July 2, 2013

அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனே விமானத்தின் கதவை திறக்க முயன்றார்.

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனான ரமித் ரம்புக்கெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித் துள்ளது. அத்துடன் மதுபோதையில் விமானத்தில் குழப் பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்விசாரணையின் போது குறித்த வீரர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் 'ஏ' பிரிவு வீரர் ஒருவர், தான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தினார்.

இவரது நடவடிக்கை தொடர்பில் மேற்படி குழுவின் முகாமையாளரது அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் முகாமையாளராக ஜயந்த செனவிரத்ன செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

3 comments:

  1. Power and staus always play dominant role in our lives,may be on the air or on the soil,it never make any differences.He may be trying to dominate even on the air as his father is a powerful person.

    ReplyDelete
  2. Corruption plays everywhere.

    ReplyDelete
  3. If it is a foreign airline what sort of action will be taken against this
    abnormal person...? The airline is compelled to do that.The cricket board of Srilanka,just forget it,it will be an eyewash.in case if they try to take disciplinary action the entire c/board will disappear.

    ReplyDelete