Wednesday, July 3, 2013

மேல் மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்க வேண்டும்.

மேல் வடமேல் மத்திய மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கப்படுவதில் எதுவித பிரச்சினையும் கிடையாது என நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் அனுபவிக்காத அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் வடக்கிற்கு வழங்குவது பிரிவினைக்கே வித்திடும் எனவும் எனவே மேல் வடமேல் மத்திய மாகாணங்களின் அதிகார த்துக்குச் சமமான அதிகாரத்தை வடக்கில் அமுலாக்காமல் போனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவினைவாத ஓட்டை களால் நுழைந்து செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரிவினைவாத ஓட்டைகளை மூடிவிடாவிட்டால் அவை பெரிதாகி சமாதானத்துக்கும் அச்சுறுத்தலாகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப் பனையில் 'ஜனசெவன' வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  July 3, 2013 at 7:10 AM  

Very upset and stupid case.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com