Wednesday, July 3, 2013

கார்டிப் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய நபருக்கு பிடியாணை

இங்கிலாந்து கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கும், இந் தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடிய நபருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட, திறந்த பிடியாணையை இன்று பிறப்பித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிப் மைதானத்தில் நடந்தபோது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடிய லோகேஸ்வரன் மணிமாறன் என்பவரையே கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  July 4, 2013 at 3:28 AM  

உண்டியல் காசில் சீவிக்கும் அந்த குரங்கை கட்டாயம் பிடித்து கொடுக்கவேண்டும்.
குரங்குகளின் குரங்கு சேட்டைகளினால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்படுகின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com