Friday, July 5, 2013

த.தே.கூ வினுள் உட்கட்சி மோதல் உக்கிரம்! சேனாதிராஜா வை முதலமைச்சர் வேட்பாளராக்காவிடின் தீக்குளிப்பாராம் நிஷாந்தன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பின ருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட் பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்க மாட்டேன் என யாழ். முன்னாள் மாநகர சபையின் உறுப் பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் தேர்தல் அறிவிக்கப்பட்டுவதற்கு முன்பிருந்தே வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முட்டி மோதிக்கொண்டனர். தேர்தல் அறிவித்தல் வந்த பின்னர் தமிழரசுக் கட்சியினர் எழுந்தமானமாக மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்ததை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே நிஷாந்தன் மாவைக்காக தீக்குளிக்க போதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய ர்தூரநோக்குச் சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதி ராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. None of the current politicians are eligible to be candidate for the CM.
    People want a honest,neutral, educated and respected person to be a CM position. The retired High court Judge Hon.Vikinaraja is the best candidate among the Tamil people.

    ReplyDelete
  2. South Indian Political Epidemic
    suicidal tendencies burning himself or herself to death slogan slowly enters into northern politics.
    He may be achieving nothing by his
    political sloganeering.This is to attract people´s attention or to suggest an idea quickly.

    ReplyDelete