Thursday, July 4, 2013

பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில், மாளிகாவத்தை பிரபல பாதாள உலகக் குழு தலைவரான மாமாஷிமி என்பவர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

இந்த சம்பவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரை கைதுசெய்து பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, வாகனத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை சந்தேகநபர் நெரித்துள்ளதாகவும், இதன்போது பொலிஸ் வாகனத்தின் பின்புறமாக அமர்ந்திருந்த விசேட அதிரடிப் படை வீரர் சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாமஸ்மீ என அழைக்கப்படும் இந்த சந்தேகநபர், மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென்றும், பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com