Monday, July 1, 2013

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் மருதமுனையில் முறைகேடு! (கடிதங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை முஸ்லிம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு வீடு பெறும் தகுதியிருந்தும் அவர்களுக்கு இன்றுவரை வீடுகள் வழங்கப்படாமல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக வும், இலஞ்சம் பெற்று வீடுகளை அதிகாரிகள் துஷ் பிரயோகம் செய்திருப்பதாகவும், குறித்த 11 பேருக்கும் மீதியாக இருக்கின்ற வீடுகளைப் பெற்றுத்தருமாறும் மருதமுனை ஜம்இயத்துல் உலமா சபைக்கு ‘65 மீட்டர் பாதிக்கப்பட்டோர் அமைப்பு’ கோரிக்கை விடுத்துள்ளது.

2013.06.10 ஆந் திகதி எழுதப்பட்டுள்ள கடிதத்தில் வீடு வழங்கலில் இடம் பெற்றுள்ள முறைகேடுகள் பற்றி இந்த அமைப்பினரால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிடும்போது,
‘ஜனாதிபதியை நம்பினோம்....முடிவு கிடைக்கும் என்று எதுவும் ஆனதில்லை, எங்கள் ஜம்இயத்துல் உலமாவை நம்பினோம்.... அல்லாஹ்வின் பேரால் வீடுகளை பெற்றுத் தாருங்கள் என்று கெஞ்சினோம்.... வாய்மூடி பேசாமடந்தைகளாக அவர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com