Wednesday, July 10, 2013

நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன

நேற்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேத் லுவிஸ் அடிப்ப டையில் 81 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தட்டிக்கொண்டுள்ளது.

மழை காரணமாக 29 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத் தப்பட்டதை அடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

26 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை, துடுப்பாட்டத்தில் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. 24.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார். இதன் பிரகாரம், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடவுள்ளன.

No comments:

Post a Comment