Saturday, July 6, 2013

சந்திரிக்கா மெடத்துடன் சேர்ந்து அரசியல் நடாத்துவேன்....! நான் நினைப்பதையே‘மெடமும் நினைக்கிறார்! – பொன்சேக்கா

தங்கள் அரசியல் எதிர்பார்க்கைகள் போன்றே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமரத்துங்கவினதும் அரசியல் எதிர்பார்க்கைகள் உள்ளன. அதனால் அவருடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணப்பாடு உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக்க் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

தற்போது அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்திருக்கிறார்.

சந்திரிக்கா மெடத்தின் ஆட்கள் எங்களுடன் இதுபற்றிக் கதைத்தார்கள். நாங்கள் சந்திரிக்கா அம்மையாருடன் சேர்ந்து அரசியல் செய்வதற்குப் பின்வாங்குவதில்லை. ஏன் என்றால் சந்திரிக்காவின் அரசியல் காலத்துக் குறிக்கோள்களில் பெரும்பாலானவை எங்கள் கட்சியின் குறிக்கோளுடன் ஒத்துநிற்கின்றன. நாட்டை அழிப்பவர்கள் யாவர், எங்களைப் பீடித்துள்ள புற்றுநோய் ஏது என்பதை நாங்கள் எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். சந்திரிக்கா அம்மையாரும் நாங்கள் சிந்திப்பது போலவே சிந்திக்கின்றார். அதனால் நாங்கள் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து பணிபுரிவோம்...’ என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment