Monday, July 8, 2013

கார் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஜவர் கொழும்பில் கைது

கொம்பனித்தெரு நவம் மாவத்தையில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களையும், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவரையும், குறித்த பெண்ணுக்கு சொந்தமான 25 லட்சம் ரூபா பெறுமதியான வாகனமொன்றையும், பாணந்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சொகுசு வாகனமொன்றில் நான்கு அழகிகளை ஏற்றிக் கொண்டு, கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்தவாறு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே ,அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தையும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் கைது செய்யும் போது, அவர்களிடம் 70000 ரூபாவும் இருந்ததாகவும், குறித்த பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஒரு மணித்தியாலயத்துக்கு 5000 ரூபா முதல் 10000 ரூபா வரை அறவிடப்படுவதாகவும், இப்பணத்தில் 50 சதவீதத்தை விபசாரத்தை முன்னெடுக்கும் பெண் அறவிடுவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபசார நடவடிக்கையை மேற்கொண்ட பெண் கடந்த 10 வருடங்களாக பெண்களை இவ்வாறு விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்களும் கைப்பற்றப்பட்ட வாகனமும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment