Friday, July 12, 2013

யாழ்.ஆளுநர் இல்லத்தில் விசேட ஆராதனைகள்!

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி பதவியேற்று நான்கு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று(12.07.2013) யாழ;ஆளுநர் இல்லத்தில் விசேட மத வழிபாடுகள்.

இந்த விசேட ஆராதனைகளில் யாழ்பாணம், நயினாதீவு, கிளிநொச்சி, கொழும்பு, வவுனியா, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, என பல மாவட்டங்களில் இருந்து விகாராதிகதிள், பௌத்த துறவிகள் என 10 மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கியதுடன் விசேட ஆராதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வுகளில் பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என ஜந்து மாவட்டங்களில் இருந்து இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் படை அதிகாரிகள், யாழ்.மாவட்ட பொலிஸ்மா அதிபர், யாழ் மாநகர முதல்வர், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்.ஆலடி உடுவில் நந்தாறாம தமிழ் பௌத்த அறநெறிப்பாடசாலை செயலாளர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com