Monday, July 1, 2013

சு.க வில் இணையவுள்ளார் த.தே.கூ யாழ் மாநகரசபை உறுப்பினர்!

தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துகொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய வுள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் தெரிவித்துள்ளார்

தனது ராஜினாமா கடிதத்தினை விரைவில் யாழ். மாநகர சபை முதல்வரிடம் தாம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இன்று(01) யாழ். ஊடக மையத்தில், இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் தனது ராஜினாமா தொடர்பில் அறிவித்தார்.

கடந்த மாநகர சபைத் தேர்தலில் நான் தமிழ் தேசியக் கூட்டமைபின் கீழ் போட்டியிட்டு, அதிக வாக்குகளில் வெற்றிபெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன், பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நானும் முரண்பட்டுக் கொண்டு வந்திருந்த நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே நான் தனித்தும் சுதந்திரமாகவும் செயற்பட்டு வந்துள்ளேன்,

கடந்த இரண்டு வாரங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டு வருகின்றேன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் என்னை, அக்கட்சியினர் எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர்.

அதற்கான நேர்முகத் தேர்விற்கும் நான் சென்று வந்துள்ளேன். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதால் மக்களுக்கான பணிகளிலிருந்து விலகுவது என்று இல்லை, தொடர்ந்தும் தமிழ் மக்களின் நலனுக்காக மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்காலத்தில் குரல் கொடுக்கவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Your services is needed for the social and economical developments of the peninsula and we hope now you have more chances to promote it.We are fed up with
    "Ambulimama Tales"

    ReplyDelete
  2. Really developments bring more prosperity.We hope this the coreect path to make a prosperous peninsula.

    ReplyDelete