Saturday, July 27, 2013

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் இரத்ததானம்!

இராணுவத்தின் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று(27.07.2013) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்த அரத்ததான முகாமில் 23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 இற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினார்கள்.

இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல், அஜித் பல்லாவல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment