Thursday, July 4, 2013

யாழ் சுகாதாரப்பணிப்பாளருக்கு டெங்குகாய்ச்சல்!!!

யாழ் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளரான வைத்தியர் கேதீஸ்வரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த மூன்று தினங்களுக்குமுன் சாதரண காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கேதீஸ்வரன் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

முன்றுதினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று வீடு திரும்பியுள்ளார்

யாழ் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புவாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் சமயத்தில் சுகாதாரப்பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

No comments:

Post a Comment