Monday, July 1, 2013

யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கைது !

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித் துள்ளார்.

அண்மையில் யாழ். பிரதான வீதியிலுள்ள விடுதி யொன்றில், விபச்சாரம் இடம்பெறுவதாக கூறி யாழ். பிரதேச செயலாளர் சுகுணவதி மற்றும் நிஷாந்தன் ஆகியோர் சென்று ஜோடியொன்றை பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் தனது விடுதிக்குள், யாழ். பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக முறைப்பாடொன்றைப் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். எனவே அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மாநகரசபை உறுப்பினரைக் தாம் கைதுசெய்துள்ளதாகவும், விரைவில் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதியில் ஜோடி ஒன்று பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோரினால் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நிஷாந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

No comments:

Post a Comment