Monday, July 1, 2013

தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே. கட்சி, த.தே.கூ. ஜே.வி.பி. மற்றும் மு.கா. இணைந்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போரா ட்டத்தை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படு கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு, ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாடு கிடையாது எனவும், அவர்கள் தேசிய பிரச்சினையை சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர் எனவும், மறுபுறம் போலிக் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து நாட்டிற்கு எதிராகவும் செயற்படுகின்றனர் எனவும், தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னணியின் பேச்சாளர் முசம்மில் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு உரையாற்றிய் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை. இறுதியாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் புறக்கணித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டோரும் செயற்படுகின்றனர்.

ஆகவே இவர்கள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாவிடினும் அரசாங்கம் தீர்வுகளை ஏற்படுத்த பின்னிற்க கூடாது. தற்போது தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். சுயநல அரசியல் வாதிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் கூட்டமைப்பு வன்னியில் மக்கள் துன்பங்களை அனுபவிக்கையில் ஒரு போத்தல் தண்ணீரைக் கூட கொடுக்கவில்லை. அதனையும் இராணுவமே செய்தது எனவே இனியும் காலத்தைக் கடத்தாது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments :

ஈய ஈழ தேசியம் ,  July 1, 2013 at 1:36 PM  

தேசிய சுதந்திர முன்னணி முசம்மில் சொன்னதில் பல உண்மைகள் உண்டு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com