Monday, July 1, 2013

எச்.ஐ.வி யின் தாக்கத்தை குறைப்பதற்கான புதிய மருந்துவ முறை

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகளை உலக சுகாதாரக் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய கணக்கெடு ப்பிற்கிணங்க ஒரு கோடிப் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய இலட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க மருந்து உட்கொள்ளும் முறைகளை சற்று முன்ன தாகவே துவங்குவதால், நோயின் தீவிரம் சற்றே குறையும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த ஒரு மருந்து, பாதிக்கப் பட்டவர்கள் உபயோகிக்க வேண்டுமென உலக சுகாதாரக மையம் பரிந்துரைக்கிறது.

மலேஷியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பரவி வரும் எச்.ஐ.வி தொற்றினால், கடந்த 2011 ஆம் ஆண்டு உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பதிக்கபட்டுள்ளர்கள் என்பதும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 65 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment: