Sunday, July 14, 2013

மஹிந்தவையும் கோட்டாவையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்பே எனக்கு நித்திரை வரும் - மக்ரே

மஹிந்தவும் கோட்டாவும் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை - ஸ்ரீதரன்

மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்பே எனக்கு நித்திரை வரும் என "சனல் 4" தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் மக்ரே தெரிவித் துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு அங்கு குழுமியிருந் தவர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லையென்று கனடாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் கனடாவிலுள்ள்ள அமைப்பே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாகவும், இந்த நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது எல்.ரி.ரி.ஈ யின் தலைவராகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரிட்டனில் இருக்கும் வணக்கத்துக்குரிய பிதா இமானுவேல் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

தன்னை ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் என்று காட்டிக்கொள்ளும் மக்ரே, எப்போதும் எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவாக அவர்களின் டொலர்நோட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தான் செல்லும் இடமெல்லாம் கண்டித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டதாக விரிவான கடிதமொன்றை எழுதியிரு ப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment