Saturday, July 27, 2013

எனக்கு உடம்பு மட்டும்தான்! தலை இல்லை என்று தயாசிரி சொன்னதற்காக கோபப்பட மாட்டேன்! - துமிந்த

தலையில்லாத உடம்பை மட்டும் கொண்டவனாக என்னை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர கடந்த காலத்தில் என்னை விமர்சித்ததற்காக நான் அவருடன் கோபப்படமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குறிப்பிடுகிறார்.

துமிந்தவுக்கு தலையில்லை உடம்பு மட்டும்தான் என்று என்னை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த தயாசிரி ஜயசேக்கர ஆளும் கட்சியியுடன் இணைந்து கொண்டமை பற்றிக் கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'பாராளுமன்றத்தினுள் அவ்வாறான செய்திகளைச் சொல்லி விமர்சித்தாலும் எங்கள் மத்தியில் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லவே இல்லை.

அதேபோல மிகத் திறமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு வந்திருப்பது குறித்து எனக்கு அளவிட முடியாத சந்தோசமாக இருக்கின்றது.

தயாசிரி அரசாங்கத்திற்கு வந்திருக்கின்றார் என்பது வட மேல் மாகாணத்தை நாங்கள் வெற்றி கொள்வோம் என்பது. அதுமட்டுமல்ல.. நாங்கள் மத்திய மாகாணத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவோம்'

(கேஎப்)

No comments:

Post a Comment