Thursday, July 4, 2013

ஸ்னோடனை கைதுசெய்ய பொலிவிய ஜனாதிபதியின் விமானத்தை தரையிறக்கிய ஆஸ்திரியா அதிகாரிகள்!

அமெரிக்காவின் உளவு இரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடன் விமானத்தில் உள்ளார் என்ற சந்தே கத்தில் பொலிவிய ஜனாதிபதி ஈவொ மொராலஸ் பய ணித்த விமானம் பாதி வழியில் ஆஸ்திரியாவில் தரையி றக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்னோடன் அந்த விமானத்தில் இருக்கவில்லை என்பதை ஆஸ்திரிய மற்றும் பொலிவிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிவிய ஜனாதிபதி ஈவோரிமாரல்ஸ் ரஷ்யாவிலிருந்து பொலிவியா புறப்பட்டபோது தமது வான்பரப்பை பயன்படுத்த பிரான்ஸ், போர்த்துக்கல் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன.

இந்த விமானத்தில் அமெரிக்க முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி ஸ்னோடன் தப்பிச் செல்கிறார் என்ற சந்தேகத்திலேயே ஐரோப்பிய நாடுகள் விமானம் பறப்பதற்கான. வான்மார்க்க அனுமதியை மறுத்திருந்தன. இதனால் விமானத்தை அஸ்திரியாவில் தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாக பொலிவியா குற்றம்சாட்டியது.

ஸ்னோடன் புகலிடம் கோரி விண்ணப்பித்த 21 நாடுகளில் பொலிவியாவும் உள்ளடக்குகிறது. இந்நிலையில் ஸ்னோடன் விமானத்தில் இருப்பதாக மிகப் பெரிய பொய்யொன்றை கூறி தனது வான்பரப்பை பயன்படுத்த பிரான்ஸ், போர்த்துக்கல் தடை விதித்தன என பொலிவிய வெளியுறவு அமைச்சர் டேவிட் சொக்கு {ஹவன்கா குற்றம் சாட்டினார்.

'யார் இந்த பொய்யை இட்டுக்கட்டினார்கள் என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விமானத்தில் இருந்த ஜனாதிபதி இவெ மொராலற்கு இழைக்கப்படட அநீதிக்கு சர்வதேச சமூகத்திடம் எமது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விமானத்தில் ஜனாதிபதியுடன் பயணித்த பொலிவிய பாதுகாப்பு அமைச்சர் ரூபன் சாவெட்ரா அமெரிக்கா தனது ஐரோப்பிய 'அரசுகளை பயன்படுத்தி செய்த விரோத செயல்' என குற்றம்சாட்டினார்.

அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஆய்வாளரான ஸ்னோடன், மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் தொடர்ந்து தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையிலேயே பொலிவிய ஜனாதிபதி மொஸ்கோவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் அதேபோன்று எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரொவும் மொஸ்கோ சென்றுள்ளார்.

இதில் ஸ்னோடனை பாதுகாக்க தயாராக இருப்பதாக மடுரோ வலியுறுத்தியுள்ளார். ஏன் அவர் மீது குற்றம்சாட்டுகின்றார்கள்? அவர் என்ன செய்தார்? அவர் யாரையாவது கொல்ல ஏவுகணை வீசினாரா? அவர் குண்டு போட்டு யாரையாவது கொன்றாரா? இல்லை. அவர் யுத்தத்தை தடுக்கிறார்' என்று வென்சுலா ஜனாதிபதி ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரியாவில் தரையிறங்கிய பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனை செய்யப்பட்ட பின் ஸ்பெயின் வான் பரப்பினூடாக பயணிக்க நேற்று அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி நடத்தப்பட்ட விதம் குறித்து ஆத்திரமடைந்துள்ள பொலிவிய அரசு தென் அமெரிக்க தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே ஸ்னோடன் புகலிடம் வழங்க அமெரிக்க ரகசியங்களை வெளியிடக்கூடாது என ரஷ்யா நிபந்தனை விதித்ததை யடுத்து அவர் ரஷ்யாவின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பத்தை மீளப் பெற்றுக்கொண்டதாக அறிவித் துள்ளார்.

1 comments :

Anonymous ,  July 4, 2013 at 8:17 PM  

It is a violation of international law.Hegemonic power against the sovereignity.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com