Friday, July 5, 2013

வழிபாட்டுக்கு சென்ற மக்களுக்கு அனுமதி மறுப்பு!!!

யாழ் மயிலிட்டியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற மக்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மயிலிட்டியில் உள்ள முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகி அம்மன் ஆலயம் என்பவற்றுக்கு தரிசனத்திற்காக மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்துள்ளது

இம்முறை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இவ் அறிவித்தலை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலய வழிபாடொன்றிற்கு செல்லவதற்காக 20 பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள் மயிலிட்டிக்கு சென்றுள்ளனர்

இவ்வாறு வருகைதந்த பக்தர்கள் இன்றையதினம் ராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுளளனர் என்று மயிலிட்டி முருகன் ஆலய தர்மகரத்தா வடிவேல்கரசன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com