Monday, July 8, 2013

இலங்கை வந்தார் சிவ்சங்கர் மேனன்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று நண்பகல் 12 மணியளவில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த சிவ்சங்கர் மேனன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்திருக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பலரையும் சந்தித்து பேசவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, சந்தித்ததுடன் நாளை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் காலை உணவு அருந்தும் சிவ்சங்கர் மேனன் அதன் பின்னர் 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை ஜனாதிபதியுடன் நடத்தவுள்ளார்.

இதனைத தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும் சிவ்சங்கர் மேனன் அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர் ஹக்கீமையும் சந்திக்கின்றார்.

No comments:

Post a Comment