ரகசியத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்படுமாம்.
வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் தலைவராக ஆனந்தராசா உள்ளார். நேற்றிரவு இவரது தெனியம்ப வீட்டினுள் நுழைந்த கள்வர் அவரது லப்டொப்பை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனந்தராசா கொழும்பு சென்றிருந்த தருணம்பார்த்து நுழைந்த கள்வர் இவ்வாறு செய்துள்ளதாக ஆனந்தராசா வின் சகோதரன் நடராஜா ராஜேஸ்வரா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
நடராஜா ராஜேஸ்ரா வின் முறைப்பாடு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் GCIB 123/43 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திருட்டானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு முரண்பாடுகளின் ஒரு அங்கம் என தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை மாநகர சபையின் உறுப்பினராகவுள்ள ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்திற்கும் ஆனந்தராஜாவிற்குமிடையே அடிக்கடி தகராறுகள் இடம்பெறுவது வழமை. சிவாஜிலிங்கத்தின் ஆட்களே இவ்வாறு செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேநேரம் திருடப்பட்ட லப்டொப்பிலுள்ள ரகசியகத்தகவல்கள் சமூக வலையமைப்புகள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் என மிரட்டல்கள் வருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.
No comments:
Post a Comment