Tuesday, July 9, 2013

தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் ரமழான் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று(09.07.2013) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment