Saturday, July 13, 2013

தடையை மீறி கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தியதனால் இரு குழந்தைகளின் தாய் கல்லால் அடித்துக்கொலை

பாகிஸ்தானில், கிராமமொன்றில் ஊர்த் தடையை மீறி கையடக்கத்தொலைபேசி வைத்திருந்தமைக்காக, இரு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவது, அந்நாட்டின் தேரா காசி கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர், ஊராருக்குத் தெரியாமல் கையடக்கத் தொலை பேசியை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது ஒருநாள் இது ஊராருக்கு தெரிய வந்ததால், உடனடியாக பஞ்சாயத்துக் கூட்டப்பட்டுள்ளது. ஊர் விதிமுறைகளை மீறி கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தியதற்காக, இரு குழந்தைகளுக்கு தாய் என்ற இரக்கம் கூட காட்டாமல், அவரை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டனர் பஞ்சாயத்தார்.

அப்பெண்ணின் மாமா மற்றும் உறவினர்களாலேயே அத்தண்டனை நிறைவேற் றப்பட்டுள்ளது. சமீபத்தில் இது சம்பந்தமாக அவரது உறவினர்கள் இருவர் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் கொடுத்த செவ்வியின் மூலம் இக்கொடூர தண்டனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்தார் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment