Saturday, July 20, 2013

இந்திய நடிகையை விமானி அறையினுள் வைத்து கூத்தடித்த விமானிகளுக்கு சஸ்பெண்ட்

விமானி அறைக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மானி அறைக்குள் நடிகை நித்யா மேனனை அனுமதித்த பைலட்கள் இருவரை ஏர் இந்தியா நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த கன்னட நடிகை நித்யாமேனன் விமானி அறைக்குள் சென்று பார்வையிட விரும்புவதாக பணிப் பெண்களிடம் கூறியுள்ளார்.

பணிப்பெண்கள் சம்பவத்தை பைலட்டுகளிடம் தெரிவித்ததும் பைலட்டுகள் நடிகை என்றதும் உடனடியாக அனுமதி வழங்கி விட்டனர். இச்சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்ததின் அடிப்டையில் விசாரணை நடத்திய ஏர் இந்தியா நிர்வாகம், விமானி அறைக்குள் நடிகையை அமர வைத்த பைலட்டுகள் ஜெகன் ரெட்டி, கிரண் ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்தது.

இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குனர் விசாரணை நடத்துகிறது.

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், விமானி அறைக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com