Monday, July 1, 2013

‘அண்ணா’ என்றதால், பொலிஸ் காவலரை நையப்புடைந்தார் பொலிஸ் பரீட்சகர் – மாத்தறையில் சம்பவம்

மாத்தறை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரிந்துபசார ஒன்றுகூடல் நிகழ்வின் இறுதியில், பொலிஸ் பரீட்சகர் ஒருவருக்கு பொலிஸ் காவலர் ஒருவர் ‘அண்ணா’ (ஐயே!) என்று குறிப்பிட்ட விடயம் பெரிதுபடுத்தப்பட்டதால் கித்துல் தடியொன்றை எடுத்து நையப்புடைக்கப்பட்டதால் பொலிஸ் காவலர் உட்பட இருவர் நேற்று (30) அதிகாலை காயத்திற்குள்ளாக்கப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்தியில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதிப் பொலிஸ் பரீட்சகர் ஒருவர் ஓய்வுபெறுவதை முன்னிட்டு மாத்தறை பள்ளிமுல்லையில் உள்ள பொலிஸ் ‘கராஜி’ல் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வின் இறுதியில் அனைவரும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரும் அவருடைய நண்பரொருவரும் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது, ‘ஹூ’ எனும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அவர்கள் தங்களது துவிச்சக்கரவண்டியை நிறுத்தியதும், அருகில் நின்றிருந்த பொலிஸ் பரீட்சகர் உள்ளிட்டோர் ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என வினா தொடுத்துள்ளனர்.

அவ்வமயம் துவிச்சக்கர வண்டியில் இருந்திருக்கின்ற பொலிஸ் காவலர் ‘ மன்னிக்கவும் அண்ணா.... ஹூ சொன்னதனாலேயே நிறுத்தினோம்’ எனச் சொல்லியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘அண்ணா என்று யாருக்குச் சொல்வதென்று விவஸ்தை தெரியாதா?’ எனக் கேட்டுள்ள பொலிஸ் பரீட்சகர் கித்துல் தடி ஒன்றைக் கொண்டுவந்து அந்த அதிகாரியை நையப்புடைத்தாக காயமடைந்துள்ள பொலிஸ் காவலர் பொலிஸில் மனு கொடுத்துள்ளார்.

எது எவ்வாறாயினும், ‘ஹூ’ என்ற ஒலமிட்டுள்ளது அருகிலுள்ள தேவாலயத்தில் தன்னை மறந்து ஆருடமாகியுள்ள ஒரு பக்தர் என்ற உண்மை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தலையிட்ட மீனவரொருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

அவ்விருவரும் தற்போது மாத்தறை பெரியாஸ்பத்திரியில 3 ஆவது வார்ட்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விடயத் தெளிவில்லாமையே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

எது எவ்வாறாயினும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமவின் ஆலோசனையின் பேரில் மாத்தறை சிரேட்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனின் கண்காணிப்பின் கீழ் உப பொலிஸ் அதிகாரி ரவீந்திர அம்பேபிட்டிய மற்றும் மாத்தறை தலைமைப் பொலிஸ் பரீட்சகர் ஹேமால் பிரசாந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment