Monday, July 1, 2013

அமெரிக்காவில் பதில் உதவி சட்டமா அதிபராக இலங்கை தமிழர் நியமனம்!

அமெரிக்காவில் நீதித் திணைக்களத்தில் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக இலங்கைத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

மைதிலி ராமன் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற துடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன் குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.

மைதிலி ராமன் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்ககம் குற்றவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். 2009 செப்டெம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் இவர் பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் 2013 மார்ச் 1 ஆம் திகதி முதன்மை பிரதி உதவி சட்டமா அதிபர் மற்றும் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மைதிலி ராமன் 1996 இல் அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் இணைந்து குற்றவியல் பிரிவில் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். 1999 தொடக்கம் 2008 வரை மேரிலான்ட் மாவட்டத்தில் சட்டமா அதிபர் பணியகத்தில் உதவி அமெரிக்க சட்டவாளராக பணியாற்றினார். இதன்போது போதைப்பொருள் தடுப்பு நிதிமுறைகேடு வன்முறைகள் சிறார் கடத்தல் குடியியல் உரிமை வழக்குகளில் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், EPRLF இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கேதீஸ்வரன் லோகநாதனின் (இவர் புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டவர்) சகோதரியின் மகளும் இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com