Monday, July 8, 2013

மட்டக்களப்பு வர்த்தகரின் சடலம் பாசிக்குடாவில் மீட்பு.

மட்டக்களப்பு செங்கலடியில் குளிர்பான முகவராக செயற்படும் வர்த்தகர் ஒருவரின் சடலம், பாசிக்குடா பகுதியில் உள்ள கடற்கரையிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய செல்லையா மனோகரன் வயது என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிளும் கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலத்தினை மகன் மனோகரன் சதீஸ்குமார் அடையாளம் காட்டினார். மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment