Friday, July 5, 2013

தேர்தலுக்கு முன் யாழ்தேவியை கிளிநொச்சியில் எதிர்பார்க்கலாம்!

யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன் கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருட இறுதிக்குள் யாழ்தேவி தொடருந்து தனது சேவைகளை யாழ்ப்பாணம் வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட பகுதிக்கான தொடருந்து பாதையை அமைக்கும், பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து பாதை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு மற்றும் வடக்கு இடையிலான உறவுகள் மேன்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்

No comments:

Post a Comment