Wednesday, July 10, 2013

வாஸின் மகன் ரவிந்து கைது செய்யப்பட்டார்.........!

கடத்திச் செல்லப்பட்டு தொம்பே பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் ஸியாமின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோதே ரவிந்து குணவர் த்தனவை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

முஹமட் ஸியாமின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே இவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment