Saturday, July 13, 2013

வடமாகாண இராணுவ முகாங்களுக்கு நிரந்தர கட்டடம்!

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நேற்றைய தினம் கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கிளிநொச்சி படைத்தளத்தை வந்தடைந்த இராணுவத் தளபதியை கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா வரவேற்க்கப்பட்டதுடன் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டபின் அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அனைவரும் உறுதிபூண வேண்டும். வட மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment