Friday, July 12, 2013

தனியார் பஸ் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படமாட்டாது - சி.பீ.ரத்னாயக்க.

தனியார் பஸ் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி தனியார் பஸ் உரி மையாளர் சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்த போரா ட்டம் படுதோல்வியடைந்துள்ளது எனவும் இலங்கை போக்குவரத்து சபையுடன் 17 பஸ் நிறுவனங்களும் 6 சங்கங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், வழமைபோன்று பஸ் சேவைகள் இடம்பெற்றன. இதனால் கெமுனு விஜேரத்னவின் வேலைநிறுத்த போராட்டம் புஸ்வானமாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசனைகளை பெற குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது எனவும் பஸ் உரிமையாளர்கள், பயணிகள் மற்றும் தனியார் போக்குவரத்து துறை அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கியதாக குழு நியமிக்கப்படுமென அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment