Monday, July 15, 2013

தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனம்

சமூகத்திலிருந்து ஒதுங்கிவாழும் மக்கள் மீண்டும் சமூகமயமாக்கும் நோக்கில் இன்று(15.07.2013) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கல்வி ஊடாக சமூக நல்லிணக்கம் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார கூறியுள்ளார்.

இதனை கொண்டாடும் முகமாக பாடசாலைகளை மையமாகக் கொண்டு பல போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர். சமூக உரிமைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூகத்துடன் இணைவதில் காணப்படுகின்ற பொருளாதார மற்றும் சமூக மற்றும் மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment