Monday, July 1, 2013

யாழ்.போதனா வைத்திய சாலை சத்திர சிகிச்சை உபகரணம் வெளியே வந்தது எப்படி?

யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு வெளியே சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பைக் (சத்திர சிகிச்சை உபகரணப் பொதி) கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுக்காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மாடிக்கட்டடத்திற்கு நெருக்கமாகக் கீழே அமைந்திருக்கும் சத்திர சிகிச்சைக் கூடத்தில் இருந்து பைக்கே இவ்வாறு வெளியே காணப்பட்டுள்ளது.

இதனை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அவதானித்து அதனை எடுத்து மீளவும் அந்தச் சத்திரசிகிச்சைக் கூடத்தில் ஒப்படைத்துள்ளார். குறித்த பைக் எவ்வாறு சத்திரகூடத்திற்கு வெளியே சென்றது என்பது குறித்து தெரியவராத நிலையில் வைத்திய சாலை நிர்வாகம் இவ்விடயம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பைக் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் பின்னர் தொற்று நீக்கிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிய வருகின்றது.

2 comments:

  1. The officer in charge of the operation theatre is answerable.The truth will come out through his explanation.Lack of discipline,lack of responsiblity,lack of sincerity are the maincause for this pilferage
    or stealing worthy articles from the public sector.

    ReplyDelete
  2. until the thief realize his or her mistake,this attitude cannot be changed.

    ReplyDelete