Saturday, July 6, 2013

காதல் தகராறால் கொலை! இலங்கை தமிழர் இந்தியாவில் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த செல்லபாண்டியனின் கொலை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப் பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவன் காதல் தகராறால் கொலை செய்யப்பட்டுள்ள தாகவும், இக்கொலையுடன் தொடர்புடைய இலங்கை தமிழ் இளைஞனொருவர், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், (22 வயது)இவர், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பல்கழைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்தார். நேற்று முன்தினம் மர்மமான முறையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் விஜயன் மகன் கஜேந்திரன், 23. முகாமில் உள்ள, இவரது முறைப்பெண்ணை, செல்லபாண்டியன் காதலித்து வந்தார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில் செல்லப்பாண்டியனை, கஜேந்திரன் கொலை செய்து, கிணற்றில் வீசியது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த கஜேந்திரனை, மலையம்பாளையம் பொலிஸார் நேற்று கைது செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment