Monday, July 8, 2013

ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது!

இலங்கையிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர் ஒருவர் தமது அதிபரூடாக எதிர்வரும் 05.08.2013க்கு முன்னராக பதிவுத் தபாலில் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் கல்வி நிருவாகக்கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும், என கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.கோடாபாய ஜயரத்ன அறிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 5.7.2013க்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 1 வருட கால ஆசிரிய சேவையையினை பூர்த்தி செய்திருத்தல் காட்டாயமானதாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கல்வி விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், சமயம், தமிழ் உள்ளிட்ட 22 பாடநெறிகளில் பயில விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com