Saturday, July 20, 2013

யாழ். பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இரண்டு பெட்டிகள் நிறைய துப்பாக்கி ரவைகள்!(படங்கள்)

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் புதையுண்டிருந்த நிலையில் இரண்டு பெட்டி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று(20.07.2013)சனிக்கிழமை தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணி மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதியில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு பெட்டிகளில் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் மற்றும் 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரும் இணைந்து மோப்ப நாயின் உதவியுடன் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் அனைத்தும் கிறிஸ் பூசப்பட்டு பாதுகாப்பாக காணப்படுவதுடன் இவை அனைத்தும் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை திங்கட்கிழமை யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்ட இடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாணவர் பேரவை அலுவலகம் 2002ஆம் தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை செயற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இதனை பயன்படுத்திவிட்டு எஞ்சியதை புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com