Tuesday, July 9, 2013

புத்தகாயா மகாபோதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பு அதிகரிப்பு.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புத்தகாயாவிலுள்ள மகா போதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து வரலாற்று புகழ்மிக்க அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாபோதியின் பாதுகாப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே பாதுகாப்பை அதிகரிப்பதென தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மகாபோதிக்கு வருகின்ற சகல வாகனங்களும் புதிய வாகன தரிப்பிட த்தில் நிறுத்தப்படும் எனவும், விசேட விருந்தினர்கள் மற்றும் விசேட அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே மகாபோதிக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com