Tuesday, July 9, 2013

இறைச்சிக் கடைகள் மட்டும் ஏன்...? அனைத்து வித தீய நடவடிக்கைகளும் நீக்கப்பட வேண்டும் – சிரேட்ட பிக்குகள்

கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க நகரிலிருக்கின்ற அனைத்து இறைச்சிக் கடைகளும் அகற்றப்படுவதற்காக புத்த பிக்குகள், அறிஞர்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஒன்றிணைந்து, கண்டி நகரின் பொது வியாபார நிலையத்தின் முன்பாக கையொப்பமிட்ட மனுவினை சிரேட்ட பிக்குகளிடம் கையளிப்பதற்காகச் சென்ற வேளை, ‘இறைச்சிக் கடைகள் மட்டுமன்றி விபச்சாரவிடுதிகள், சூதாடுமிடங்கள், திரட்டுத்தனமான காரியங்களில் இயங்கும் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்’ என அவர்களிடம் சிரேட்ட பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவதற்காக பௌத்தர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். மத்திய மாகாண சிரேட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு இவற்றை நீக்க வேண்டிய எண்ணம் இருந்தாலும் கூட சிற்சில தலையீடுகள் காரணமாக அவரால் அதனை நிறைவேற்றவியலாத துர்ப்பாக்கிய நிலையில் அவர் உள்ளார்.’ என்றும் சிரேட்ட பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  July 9, 2013 at 4:42 PM  

Wiping out the rubbish is essential to have a peaceful and mentally healthy environment.Law and order must help to the clearance of the
thrash.

Anonymous ,  July 11, 2013 at 5:46 PM  

Killing of animals also encourage to make us in developing bran dish attitude among us.It also makes us to have brutality behaviour.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com