Wednesday, July 10, 2013

கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட கப்பல் மூழ்கியது? இலங்கையர்களின் நிலை உறுதிப்படுத்தமுடியவில்லை!

சோமாலியக் கடற்கொள்ளையர்களால், 2010 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட மலேஷிய சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர்.

இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப் படுத்தமுடியவில்லை.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற் கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர், ஐரோப்பிய கடற்படையினர், தாங்கள் கடற்பகுதியில் தேடியபோது, எந்த உடலும் கிடைக்க வில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com