Tuesday, July 2, 2013

கதிர்காம பூசகரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது.

செல்லக் கதிர்காமம் ஆலயமொன்றின் பூசகர் ஒருவரது கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர், பதுளை புறநகர்ப் பகுதியிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளார் என பதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று பதுளைப் பொலிஸாரினால், கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கதிர்காமம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த போதிலும், ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் பிரதான சந்தேகநபரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செல்லக் கதிர்காமம் ஆலயமொன்றில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பசளை பையொன்றில் தினிக்கப்பட்ட நிலையில், சடலம் கதிர்காமம் பொலிஸா ரினால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com