Monday, July 29, 2013

கணவன்மாரின் பணத்தில் சூதாடிய பெண்கள் கைது!

அம்பலாங்கொடை சீனிகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கிவந்த பெண்கள் சூதாட்ட மையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்து பலபிட்டி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக தலா 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன்மார் உழைக்கும் பணத்தைக் கொண்டு குறித்த பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கணவன்மார் பொலிஸில் செய்த புகாரின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பெண்கள் அனைவரும் தமது பிள்ளைகள் பற்றி கவலைப்படாது கடன் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment