Saturday, July 6, 2013

கல்லறையிலிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் துஷ்பிரயோகம்!

கல்லறையிலிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது சிறுமியொருவரின் சடலம் புதைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே கல்லறை யிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இனந்தெரியாத நபர் களால் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டுள்ளார்.

ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் குறிப்பிட்ட சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை குஜ்ரன்வலா மாவட்டத்தில் கிலா டெடார் சிங் எனும் இடத்திலுள்ள தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்துள்ளார்.

அன்றைய தினம் மாலை சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்த அவரது உறவினர்கள், மறுநாள் அவரது கல்லறைக்கு விஜயம் செய்த போது சிறுமியின் சடலம் கல்லறைக்கு அருகில் அலங்கோலமான நிலையில் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் சிறுமியின் சடலத்திற்கு நிந்தனை செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித் துள்ளதுடன் அத்துடன் மயானத்தில் புதைகுழி தோண்டுபவர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

3 comments :

karan ,  July 6, 2013 at 11:26 AM  

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

Anonymous ,  July 6, 2013 at 3:15 PM  

கரன் நீர் என்ன சொல்ல வருகிறீர்... மார்க்கத்தை இழிந்துரைக்க உமக்கு ஹதீஸ் கிடைத்திருக்கோ... வாங்கிக் கட்டிக் கொள்ளப்போகிறீர்... இறையின் தண்டனை மகா பெரியது.... தெரிந்து கொள்!

Anonymous ,  July 6, 2013 at 10:44 PM  

Karan your too right , this religions allowed do anything for sex, see other News grandgather 92 yrs married 22 yrs Girl, may be this Girl his 100th wife, only this peoples will angry if some one remember thats , what a fucking relion this , is this relion for humans or animals, animals will also not accept.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com