Wednesday, July 10, 2013

புத்தகயாவை தொடர்ந்து எமது அடுத்து இலக்கு மும்பை நகரம் - முஜாஹிதீன் அமைப்பு

புத்தகயா புனித தளத்தையடுத்து தமது அடுத்த தாக்குதல் இலக்கு மும்பை நகரமாகுமென இந்திய முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக குறித்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

புத்தகயா மீதான தாக்குதலையும் தாம் பொறுப்பேற்பதாக முஜாஹிதீன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமது அடுத்த தாக்குதலுக்கு இன்னும் 7 தினங்கள் மாத்திரமே இருப்பதாகவும் முடியுமாயின் அதை தடுக்குமாறு இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கு முஜாஹிதீன் அமைப்பு சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாது காப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை புத்தகயா மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளும் முன்னெ டுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய 4 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் 20 வயதையுடைய இளைஞர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான புத்தகயா மகா போதி விகாரைக்கு விஜயம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தீர்மானித்துள்ளார். அவருடன் இந்திய உட்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டேயும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment